Saturday, July 23, 2011

உலகத்தின் தொடர்பே இல்லாமல் வாழும் அமேசான் பழங்குடியினர்



பிரேசில் அரசு கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு தகவலை வெளியிட்டது, அது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இருக்காத பின்னே! வெளி உலகத்தின் தொடர்பே முற்றிலும் அற்று பொய் ஒரு கூட்டம் தனியே அமேசான் காடு பகுதியில், பேரு நாட்டின் எல்லை ஓரத்தில் வசித்து வருவதை கண்டறிந்து அதிகார பூர்வமாய் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

விமானம் மூலம் எடுத்த புகை படங்களின்ஆதாரமாக வைத்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது பிரேசில் அரசாங்கம்.


இவர்கள் தங்கள் குடிலை தாங்களே அமைத்துக்கொண்டு வாழும் அளவுக்கு நாகரீகம்  அடைந்துள்ளனர். விமானத்தை பார்த்து ஏதோ தங்களை தாக்க வருவதாக எண்ணிக்கொண்டு வில் கம்பைகொண்டு எரிவதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.


பல ஆச்சர்யமூட்டும் தகவலும் உண்டு. புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் ஆடைகளை உடுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு பருத்தி ஆடைகளை நெய்ந்து அணியும் அளவுக்கு நாகரிகம் கொண்டவர்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர்.


பி பி சி தன் குழுவோடு போய் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன். இதன் ஆராய்ச்சியாளர் "டேன் ஜேம்ஸ், பெரு நாட்டை சேர்ந்தவர், மேலும் அமேசான் காட்டில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.


ஆனா ஒன்னு மக்கா!! இவங்கள பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. பின்ன இருக்காத, கரன்ட் பில், டெலிபோன் பில், வாட்டர் பில், காஸ் பில், பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி ஏற்றம் அப்படின்னு எந்த பிரச்சினையும் இல்ல. பிரேசில் அரசுக்கு ஒரே வேண்டுகோள் அவங்களையாவது நிம்மதியா வாழ விடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்!!

மேலும்  விவரங்களை தெரிந்துகொள்ள www . amazon -indians .org என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .