Wednesday, February 20, 2019

15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”

செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய நாசா அமைப்பு அனுப்பிய Opportunity Rover என்ற விண்கலம் தனது 15 வருட பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.

2003 ம் ஆண்டு அனுப்பப்பட்ட Opportunity Rover, 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறங்கி செவ்வாய் கிரகத்து இடங்களைப் படம் எடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தது. செவ்வாய் கிரகச் சூழ்நிலையை, அங்கே என்னென்ன உள்ளது என்பதை அறிய வாய்ப்பாக இருந்தது.
புழுதிப் புயலில் சிக்கிய Rover 
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம், விண்கலம் இயங்க சூரிய ஒளி அவசியம் என்று. 2007 ம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி மண் படிமத்தால் Opportunity Rover விண்கலம் தொடர்பை இழந்தது, பின் மண் படிமம் விலகி செயல்பட ஆரம்பித்தது.
இதன் பிறகு 2018 வரை பெரிய பாதிப்பில்லாமல், இயங்கிக்கொண்டு இருந்தது.
ஆனால், 2018 ஜூன் மாதம் மீண்டும் ஏற்பட்ட புழுதிப் புயலில் சோலார் தகடுகளில் புழுதி படிமம் படிந்ததால், சூரிய ஒளியைப் பெற முடியவில்லை. இதனால் பூமியில் இருந்து விஞ்ஞானிகளால் Opportunity Rover விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நவம்பர் முதல் ஜனவரி வரை செவ்வாய் கிரகத்தில் காற்று அதிகம் இருக்கும் காலம் என்பதால், காற்றின் காரணமாகச் சோலார் தகடுகளில் உள்ள புழுதிப் படிமம் விலகும் என்று காத்து இருந்தார்கள் ஆனால், அது நடக்கவில்லை.
பல முயற்சிகளுக்குப் பிறகு நாசா கடந்த வாரம் Opportunity Rover இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக வருத்தத்துடன் அறிவித்தார்கள்.
243.76 மில்லியன் கிலோமீட்டர்
243.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்த Opportunity Rover 15 வருடங்களில் 43 கிலோ மீட்டர் பயணம் செய்து படங்களை அனுப்பி உள்ளது.
243.76 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்கி படம் எடுக்க வைத்து… ஷப்பா .. எனக்குக் கண்ணைக் கட்டுகிறது. வாய்ப்பே இல்லை.. அதுவும் 15 வருடங்கள்.. நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது.
எனக்கு ஒரே ஒரு வியப்பு 15 வருடங்கள் கூடி 43 கிலோமீட்டர் தான் இயக்க வைக்க முடிந்தது என்பது! ஆனால், இந்த 43 கிலோமீட்டர் பயணத்தில் Rover எடுத்துக்கொடுத்த படங்கள், தகவல்களின் மதிப்பு அளவிட முடியாதது.
இதன் படங்கள் வந்த போது இப்பயணத்தில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்பதை நினைத்தாலே பரவசமாக உள்ளது.
சந்தேகம் 
செவ்வாய் கிரகத்தில் புவியீர்ப்பு விசை கிடையாது ஆனால், நாசா வெளியீட்டுள்ள அனிமேஷன் (பின்வரும் காணொளி பார்க்கவும்) உத்தேச காணொளியில் விண்கலம் உள்ள பாதுகாப்பு பந்து கீழ் நோக்கி வந்து பூமியில் பந்து குதிப்பது போல குதிக்கிறது.
இது எப்படி? யாராவது தெரிந்தவர்கள் விளக்கவும்!
தரமான சாதனங்கள்
15 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு விண்கலத்தை அனுப்பிப் படம் எடுக்க வைத்து, இவ்வளவு காலம் அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள் என்றால், தற்போது இது போல ஒன்றை அனுப்பினால் அது எவ்வளவு முன்னேற்றத்துடன் கூடிய தொழில்நுட்பமாக இருக்கும்!
Rover வாகனத்தில் இருந்த சாதனங்கள் 15 வருட பருவ சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து வேலை செய்துள்ளது என்பதை நினைத்தால், தலை கிறுகிறுக்கிறது.
எவ்வளவு தரமான சாதனங்களாக அவை இருந்து இருக்க வேண்டும்! தற்போது கூட Rover பழுதடைந்து இறுதி மூச்சை விடவில்லை, புழுதிப் படலம் காரணமாகவே செயலிழந்துள்ளது.
உதாரணத்துக்கு யாராவது அங்கே இருந்து, அந்தப் புழுதிப் படிமத்தை துடைத்து விட்டால் திரும்ப வேலை செய்யத் துவங்கி விடும். அவ்வளோ தான்!
எனக்கு எப்போதுமே விண்வெளி சம்பந்தப்பட்டவை வியப்பை அளித்துக்கொண்டே இருக்கும். அதென்னமோ இது சம்பந்தப்பட்ட செய்திகள் தகவல்கள் என்றால், விருப்பமாகப் படிப்பேன்.
Opportunity Rover யைத் தயாரித்து, 15 வருடங்களாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, செவ்வாய் கிரகம் பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்களை நமக்கு அறியத்தந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் 🙂 .
கொசுறு
நான் எழுதிய கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் “மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்” கட்டுரை முக்கியமானது.
பலரின் எண்ணங்களைக் கேள்விகளை வியப்புகளை நான் கட்டுரையில் பிரதிபலித்ததாகப் பலர் கருத்திட்டு இருந்தனர். எனக்குச் சிறு மகிழ்ச்சி! 🙂 .
இதில் நண்பர் கௌரிஷங்கர் “விண்கலம் எப்படி விண்வெளியில் செல்கிறது” என்பதை எளிமையாகக் கருத்துப் பகுதியில் விளக்கியிருந்தார். எனக்கு வந்த சிறப்பான எளிமையான கருத்துகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
இதுவரை படிக்கவில்லை என்றால், உங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் இருந்தால், இக்கட்டுரை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.

போலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்


AnyDesk என்ற செயலி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. அதுக்குறித்து RBI வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியாதவது, ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோர்களில் எனிடெஸ்க் (AnyDesk) என்ற ரிமோட் கன்ட்ரோல் செயலி இருக்கிறது. இந்தச் செயலியை உங்கள்

தொலைபேசியில் தரவிறக்கம் செய்தால், உங்கள் மொபைலில் உள்ள டிஜிட்டல் வாலட் மற்றும் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை யுபிஐ (UPI) மூலம் திருடலாம் எனத்தெரிவித்துள்ளது.

இந்த செயலியை தரவிறக்கம் செய்யும் போது 9 இலக்க கோடு உருவாக்கப்படும். அதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து விவரங்களும் அவர்களால் திருட முடியும். எனவே இந்த செயலியை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த செயலியை பயன்படுவதனை தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Monday, February 18, 2019

இந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வைத்திருக்கும் இரகசியம் என்ன தெரியுமா?


பூமியில் ஆயிர கணக்கான பூக்கள் உள்ளது. சில வகை பூக்கள் ரசிப்பதற்கு மட்டுமே. சில வகை பூக்கள் சூடுவதற்கு மட்டுமே. ஆனால், ஒரு சில பூக்கள் மட்டும் தான் இந்த பூமியில் உள்ள மற்ற ஜீவ ராசிகளுக்கும் அருமருந்தாக பயன்படுகிறது. உண்மையிலே சில பூவுக்குள் ஆயிரம் ஆயிரம் இரகசியங்கள் இன்றும் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது.
இப்படிப்பட்ட மகிமைகள் நிறைந்த பூக்களின் வரிசையில் தான் இந்த பூவும் சேர்ந்துள்ளது. பலவித மருத்துவ குணங்கள் இந்த பூவில் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படுகின்ற பல்வேறு நோய்களுக்கும் இது தீர்வாக உள்ளது. இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பூவின் பெயரையும் இதனால் நமக்கு கிடைக்கும் ஈடற்ற நன்மைகளையும் இனி அறிந்து கொள்வோம்.
என்ன பூ?
மற்ற பூக்களை போலவே பார்ப்பதற்கு இந்த பூவும் ரம்மியமாக இருக்கும். இதன் இதழ்கள் வெளிர்ந்த வெண்மை நிறத்தை கொண்டிருக்கும். உட்புறத்தில் இளம் மஞ்சளாக இது காணப்படும். இதன் பெயர் தான் நாகப்பூ. இதனை கோவில்களில் நாம் பெரும்பாலும் பார்க்க இயலும்.
மலச்சிக்கல்
மருத்துவ குணம் நிறைந்த பூவை வைத்து தீராத மலச்சிக்கலையும் குணப்படுத்தி விடலாம். மலம் கழிக்கும் போது இரத்தம் ஏற்பட்டால் அதனையும் இந்த பூவை கொண்டு குணப்படுத்தலாம். இதற்கு இந்த பூவை 1 கிராம் அளவிற்கு எடுத்து, அரைத்து கொண்டு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நலம் பெறலாம்.
பாம்பு கடி
பாம்பு கடி ஏற்பட்டால் இந்த பூவின் வேரை வைத்தே விஷத்தை முன்பெல்லாம் முறித்து விடுவர். இதில் உள்ள மருத்துவ குணம் பாம்பின் விஷத்தை உடலில் இருந்து நீக்கும் தன்மை கொண்டதாம். மேலும், சருமத்தில் ஏற்படுகின்ற அரிப்பு, சொரி போன்றவற்றிற்கும் இது தீர்வை தரும்.
குடல் புழு
செரிமான பிரச்சினை கொண்டோருக்கு இந்த நாகப்பூ சிறந்த மருந்தாக செயல்படும். இதை வைத்தே அஜீரண கோளாற்றை குணப்படுத்தி விடலாம். அத்துடன் குடலில் சேர்ந்துள்ள புழுக்களை கொன்று வெளியேற்றி விடும் தன்மை இதற்குண்டு.
சுவாச கோளாறுகள்
சுவாச பிரச்சினை இருந்தால் இந்த பூ உங்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். சளி தொல்லை, இரும்பல், ஜலதோஷம் போன்றவற்றை தீர்வுக்கு இது கொண்டு வரும். அத்துடன் ஆஸ்துமா பிரச்சினைக்கும் இது வழி வகுக்கும்.
மாதவிடாய்
பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகளை இந்த பூ குறைத்து விடும். மேலும், அதிக அளவில் உதிர போக்கு ஏற்பட்டால் அதை குறைக்கவும் நாகப்பூ போதும். கூடவே பெண்களுக்கான சிலபல மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை இது தீர்க்கவும் உதவும்.
வாத நோய்
வாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் இந்த பூ பயன்படும். இதில் உள்ள மருத்துவ தன்மை வாத நோய்களை மிக எளிதில் தீர்த்து விடும். அத்துடன் உடல் வலிமையையும் இது அதிகரிக்கும் தன்மை கொண்டது.
மன அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் சிறந்த தீர்வாக இந்த பூ இருக்கும். மன அழுத்தத்தை குறைத்து இலகுவான நிலையை இது உங்களுக்கு ஏற்படுத்தும்.

கடன் தொல்லை… விடுபடுவது எப்படி? – ஸ்னோபால் வழிமுறைகள்


டன் வாங்குவதற்கு அவமானப்பட்ட காலம் போய், எதற்கெடுத்தாலும் கடன் வாங்குகிற நவீன உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். பர்சனல் லோன் வேண்டுமா, ஹோம் லோன் வேண்டுமா, கார் லோன் வேண்டுமா என வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. இ.எம்.ஐ ஆஃபர் மூலம் நிறுவனங்களும் நம்மை கடன் வாங்கத் தூண்டுகின்றன. இந்தக் கடன்கள் மூலம் கிடைக்கும் வசதிகள் குறுகிய காலத்தில் நம்மை மகிழ்ச்சியில் கொண்டாட வைப்பது என்னவோ உண்மைதான். ஆனால், நீண்ட காலத்தில் நம்முடைய நிதி மற்றும் முதலீட்டு வாழ்க்கையைச் சிக்கலாக்கி விடுகிறது என்பதைப் பிறகுதான் உணர்கிறோம்.
குழந்தைகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, உங்கள் ஓய்வுக்காலத்துக்கு என வாழ்க்கையின் எந்தவொரு முக்கியமான இலக்குகளுக்கும் முதலீடுகளைத் தொடங்க முடியாமல் கடன் சுமையில் தவிப்பவர்கள் ஏராளம். இப்படிச் சிக்கலில் சிக்கித் தவிக்கும்போதுதான் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட என்ன வழி என நாம் தேடுகிறோம். 
மாதந்தோறும் செலுத்தும், கடன் தவணைகள் (EMI) இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், நாம் அனைவரும் ஏதோ ஒருவிதமான கடனுக்கு கடமைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். கார் கடன், தனிநபர் கடன், நகைக் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்ற ஏதாவது ஒரு கடன் தவணையைக் கட்டி கொண்டுதான் இருக்கிறோம். பலர் ஒரே நேரத்தில் பல கடன் தவணைகளை கட்டிக் கொண்டிருப்பார்கள். கடன் தவணைகள் இல்லாத வாழ்க்கை சாத்தியமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
கடன் தவணை இல்லாத வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியுமா என்றால், நிச்சயம் முடியும். இந்தக் கனவை, நனவாக்குவது எப்படி எனப் பார்ப்போம். உலகப் புகழ் பெற்ற முதலீட்டு விஞ்ஞான இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் நிரூபிக்கப்பட்ட ஸ்னோபால் (snowball) வழிமுறையின் மூலம் இதைச் செயல்படுத்தலாம்.
கடன் பனிப்பந்து என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். இது பெரும்பாலும் நிறைய மக்கள் நம்பும் விஷயத்துக்கு எதிரானது. கடனை விட்டு வெளியேற முதலில் அதிக வட்டி விகிதத்துடன் உள்ள பெரிய கடனை முதலில் செலுத்த வேண்டும் / முடிக்க வேண்டும் என்று பலர் நம்புவதற்கு முரணாக இருக்கிறது.
நீங்கள் முதலில் சிறிய கடனைச் செலுத்த தொடங்கும்போதே, உங்களால் உங்களது கடன் பனிப்பந்திற்கு ஓர் உந்துவேகத்தை உருவாக்க முடியும். ஆனால், இந்த நிலை அதிக வட்டியுடன் உள்ள கடனைத்தான் முதலில் செலுத்த வேண்டும், அதன்மூலம்தான் பணத்தைச் சேமிக்க முடியும் என்ற நமது எண்ணத்திற்கும் நம் பாரம்பர்ய ஞானத்திற்கு எதிரானது. உங்களின் எண்ணம் உண்மையாகக்கூட இருக்கலாம்.
ஆனால், நீங்கள் மிகப்பெரிய கடனைக் கட்ட ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் கணிசமான முனைப்பு மற்றும் உங்கள் உந்துசக்தியை இழக்கக்கூடாது என நினைக்கலாம்; அல்லது  முழுத்தொகைக்குச் செலுத்த நெருங்கும்முன்பே அதனை விட்டுவிட்டுச் செல்லும் நிலையும் ஏற்படலாம். எனவே, உங்களுடைய கடன்களை முழுமையாகச் செலுத்தும்வரை நீங்களே உங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது மிகவும் தேவையான ஒன்று.

* பின்பற்ற வேண்டியவை
கீழே குறிப்பிடப்பட்டிருப்பது, நீங்கள் படிப்படியாகத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய செயல்முறையாகும்.
1. உங்களின் கடன்களை மிகச் சிறியது முதல் பெரியது வரை முதலில் பட்டியலிடுங்கள்.
2. மிகக் குறைவான கடன் தொகையைத் தவிர்த்து, பாக்கி அனைத்துக் கடன் தொகை களுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்திவிடவும்.
3. உங்களின் சிறிய கடன் பட்டியலைப் பார்த்து அதில் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பணத்தையும் செலுத்திவிடவும்.
4. கடன் முழுமையாகக் கொடுக்கப்படும் வரை ஒவ்வொரு கடனையும் செலுத்தவும். 
5. உங்களுக்கு ஏதாவது கூடுதல் பணம் கிடைத்தால், அதனையும் முதலில் மிகக் குறைந்த கடனைச் செலுத்துவதற்கு இதே முறையைப் பயன்படுத்துங்கள்.
உதாரணத்தைக் கவனியுங்கள்
நாம் ஒரு உதாரணத்தை எடுத்துக்கொண்டு, அது எப்படி நமக்கு வேலை செய்கிறது அல்லது உதவுகிறது என்று பார்ப்போம். உங்களிடம் கீழே குறிப்பிட்டுள்ள படி, நான்கு வகையான கடன்கள் உள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
1) கிரெடிட் கார்டு கடன் ரூ.25,000 –  அதன் வட்டி 18 சதவிகிதத்துடன் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தவணை தொகை ரூ.1,250 
2). மற்றொரு கிரெடிட் கார்டு கடன் ரூ.50,000 – அதன் வட்டி 24 சதவிகிதத்துடன், மாதாந்திரத் திருப்பிச் செலுத்தும் தவணைத் தொகை ரூ.2,500 
3) கார் கடன் ரூ.3,00,000 – இதன் கெடுகாலம் நான்கு ஆண்டுகள். ஆனால், நான்கு வருட காலத்திற்குள் 9% வட்டி விகிதத்துடன் மாதாந்திர திருப்பிச் செலுத்தும் தவணைத் தொகை ரூ.6,750.
4) கல்விக் கடன் ரூ.7,50,000. வட்டி விகிதம் 5%. ஒரு வருடத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ரூ.7,950

செயல்திட்டம்
நீங்கள் மேலே குறிப்பிட்ட நிலுவையிலுள்ள ஒவ்வொரு கடனுக்கும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இதில், அத்துடன் கூடுதலாக, முதல் கடனான கிரெடிட் கார்டு கடனைச் செலுத்தி முடிக்க வேண்டும். அதற்கு குறைந்தபட்சத் தொகையாக ரூ.5,000 கூடுதலாகச் சேர்க்க வேண்டும். மாதாந்திரத் தவணைத் தொகை ரூ.1,250 மற்றும் ரூ.5,000 சேர்த்து ரூ.6,250 செலுத்தினால் நீங்கள் நான்கு மாதங்களில் முதல் கடனைச் செலுத்தி முடிக்க முடியும்.
அடுத்து, இரண்டாவது கடனான கிரெடிட் அட்டைக்குக் கவனம் செலுத்தி, அதற்கும் மாதம் ரூ.8,750 செலுத்தலாம் (கூடுதலாகச் செலுத்தும் ரூ.5,000, முதல் கடனுக்கான தவணைத் தொகை ரூ.1,250 மற்றும் இந்தக் கடனுக்கான தவணைத் தொகை 2,500). ஐந்து மாதங்களில் இரண்டாவது கடனைச் செலுத்தி முடித்துவிட முடியும்.
அடுத்து கார் கடனுக்கு நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.15,500 (ரூ.8,750 மற்றும் கார் கடனுக்கான மாதாந்திரத் தவணைத் தொகை ரூ.6,750) செலுத்த முடியும். கார் கடன் 15 மாதங்களில் முழுமையாகச் செலுத்தி முடிக்கப்பட்டுவிடும். மூன்று கடன்களை முடித்தபிறகு உங்களுக்கு ஓரளவு நம்பிக்கையும் நிம்மதியும் கிடைத்துவிடும்.
அடுத்து, கல்விக் கடன் மட்டுமே. மாதந்தோறும் ரூ.23,450 செலுத்தினால் (ரூ.15,500 மற்றும் கல்விக் கடனுக்குச் செலுத்தும் மாதாந்திரத் தொகை ரூ.7,950),  நீங்கள் அடுத்த 24 மாதங்களில் கடன்களில் இருந்து விடுபடுவீர்கள்.
முனைப்புடன் கவனம் செலுத்தி, உங்களுடைய மிகச் சிறிய கடன் தொகையில் தொடங்கி, பெரிய தொகையைச் செலுத்தி முடித்துவிட்டீர்கள்.
நீங்கள் ஊக்கம் தேவைப்படும் நபராக இருந்தால், உங்களுக்கு ஸ்னோபால் முறையே சரியான வழிமுறையாக இருக்கும். எல்லாக் கடன்களையும் செலுத்தி முடித்து நிம்மதியாக இருக்க இது உதவும். 

இனி உங்களின் இதர தேவைகளுக்கான செலவுகளை சுலபமாகச் செய்ய முடிவதுடன், எதிர்கால இலக்குகளுக்குத் தேவையான முதலீடுகளையும் மேற்கொள்ள முடியும்.

ப.சரவணன், பேராசிரியர், ஐ.ஐ.எம், திருச்சி

தொப்புள் கொடி வழியே வரும் தொற்று!


பிறந்தது முதல் ஐந்து வயது வரை, எலும்பு – மூட்டுகளில் ஏற்படும் தொற்று பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை.

பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஏற்படும், இது போன்ற தொற்று, தொப்புள் கொடி வழியே பரவும். சில சமயங்களில், அம்மாவின் பிறப்புறுப்பில் உள்ள தொற்று குழந்தையை பாதிக்கலாம். பிறந்த குழந்தைக்கு, நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்; அதனால்,தொற்று எளிதாக ஏற்படுகிறது.
ஒரு வயது, இரண்டு வயதில், ஜலதோஷம், காதில் சீழ், மார்புச் சளி, சிறுநீர் தொற்று ஏற்பட்டால், பாக்டீரியாக் கிருமிகள் ரத்தத்தில் பரவி, எலும்பு, மூட்டுக்களுக்கும் பரவலாம்.

ஒரு வயதிற்கு மேல், குழந்தை ஓடியாடி விளையாடும் போது, மென்மையான கால்கள், பாதங்களில், அடிபட்டால் ஏற்படும் காயங்கள் வழியே, கல், மண் உள்ளே செல்வதால் ஏற்படும் தொற்றுக் கிருமிகள், ரத்தத்தின் வழியே, எலும்பு, மூட்டுகளையும் பாதிக்கலாம்.

எலும்பு வலுப்பெற…

குழந்தை, ஓடியாடி விளையாடுவது, அதிலும் சூரிய ஒளியில் விளையாடுவது மிகவும் அவசியம். அப்போது தான், வைட்டமின் – டி கிடைத்து, கால்சியம் சத்தை, முழுமையாக உடல் கிரகிக்கும். கால்சியம் நிறைந்த, சமச்சீரான ஊட்டச்சத்து கொடுக்க வேண்டும்.

எப்படி கண்டுபிடிப்பது?

காய்ச்சல் இருக்கும் சமயத்தில், கை, கால்களை உதைத்து விளையாடிய குழந்தை, அசையாமல் இருப்பது, திடீரென்று நடக்க முடியாமல் போவது, மூட்டுக்களை தொட்டவுடன் வலியால் அழுவது ஆகியவை, உடனடியாக கவனிக்க வேண்டியவை. 

தொற்று காரணமாக, குழந்தையின் மூட்டுகளில், சீழ் பிடித்தால், 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்து, தேவையான சிகிச்சை தர வேண்டும். இல்லையென்றால், மூட்டு முழுவதும் கெட்டுப் போய், வாழ்நாள் முழுவதும் முடமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

துவக்கத்திலேயே சிகிச்சை செய்தால், மருந்தினாலேயே குணப்படுத்த முடியும். பிரச்னை பெரிதானால், அறுவை சிகிச்சை செய்து, சீழ் முழுவதையும் அகற்றி, மருந்து தர வேண்டும்.

டாக்டர் ஆர்.சங்கர், குழந்தைகள் எலும்பு, மூட்டு மருத்துவர், சென்னை.

உடலை பாதுகாக்கும் பருப்புகள்


உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.
பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும். 

பச்சை பயறு: புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து  குறைய உதவியாக இருக்கும்.கொண்டைக்கடலை:  கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும். 

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். 

கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும்  இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும். 

சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு: தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

பாத்திரமறிந்து சமையல் செய் !


பாத்திரமறிந்து பிச்சை இடு’ என்று தானம் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஆலோசனை சொல்லும் பழமொழியைக் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல், சமையல் செய்யும் பாத்திரத்திலும் சூட்சுமம் உண்டு.

நவீனத்தின் மீது மோகம் கொண்ட நாம் பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காகவே மைக்ரோவேவ் ஓவன், சப்பாத்தி மேக்கர் மற்றும் நான் ஸ்டிக் குக் வேர் என சமையலறையில் புதிதுபுதிதான பொருட்களை அதிகமாக உபயோகிக்கிறோம். மேலும், அரிசி, பருப்பு வகைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கும் பழக்கம் வந்துவிட்டது.

முன்பெல்லாம் சில்வர் டப்பாக்கள், தகர டின்களை பயன்படுத்தி வந்தார்கள். நம் நாட்டு உணவு மரபுகள் ஆச்சரியமானவை. அதில் ஒன்று, நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பாலான சட்டி, கடாய், ஈயச்சொம்பு போன்ற பாத்திரங்கள். இந்த இரும்பு பாத்திரங்களில் சமைத்த உணவை உட்கொண்டு வந்ததாலேயே நம் முன்னோர்களுக்கு, இப்போது இருக்கிற மாதிரி ரத்தசோகை வந்ததில்லை.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்போது எண்ணெயின் அளவு மிகக் குறைவாகத்தான் தேவைப்படும். அதனால், கொழுப்பு சேராது என்று நினைத்துப் பயன்படுத்துகின்றனர். ஆனால், நான்ஸ்டிக் பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் PFOA (Perfluorooctanoic Acid) என்ற வேதிப்பொருள் தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருட்களுடன் ஒட்டுவது இல்லை. எனவே, இந்த வகைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். லைப்போபுரோட்டீன் என்னும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

மாறாக, இரும்பு பாத்திரங்களில் சமைக்கும் நேரம் அதிகம் எடுத்துக் கொள்வதோடு, உணவின் ஊட்டச்சத்துக்களை வெளியேறாமல் தக்கவைத்துக் கொள்கிறது. உடல் வெப்பத்தை தணிக்கிறது. மேலும், சமைக்கும்போது, பாத்திரங்களில் இருக்கும் இரும்பு வெளிப்பட்டு, உணவில் கலந்து, நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதை ஆய்வும் உறுதிப்படுத்துகிறது. அதனால், வாரத்திற்கு 2, 3 முறையாவது இரும்பு சட்டியில் சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், கூடுதலாக இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையிருக்காது.  

Wednesday, February 13, 2019

காலையில் பல் துலக்குவது தவறா? இது மட்டும் செஞ்சா போதுமாம் - சமீபத்திய ஆய்வு!



காலை நேரத்தை விட, மாலையில் பல் துலக்குவது தான் நல்லது, ஆரோக்கியமானது - சமீபத்திய ஆய்வு தகவல்!

பாக்டீரியாக்கள்!

இரவில் தான் பற்களில் அதிக கிருமிகளில்ன் தாக்கம் உண்டாகிறதாம். மேலும், இரவில் தான் பாக்டீரியாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன.

லாக்டிக் அமிலம்!

இந்த லாக்டிக் அமிலம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை சிதைத்து, பற்களில் சொத்தை மற்றும் இதர பிரச்சனைகள் உண்டாக காரணியாக திகழ்கிறது.

அரை மணி நேரத்தில்!

நாம் உறங்கிய அரை மணி நேரத்தில் கிருமிகள் பற்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும் வேலைகளில் இறங்கிவிடுகின்றன. எனவே, உறங்குவதற்கு முன்னர் இரவில் பல் துலக்குவது தான் சரி என நிபுணர்கள் சமீபத்திய ஆய்வில் கூறியுள்ளனர்.

அப்போ காலையில?

காலையில் பல் துலக்குவதற்கு பதிலாக சுடு தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து வாய் சுத்தம் செய்தால் போதுமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்போ பேஸ்ட்ல உப்பு வேண்டாமா?

கண்ட பேஸ்ட், கண்ட பிரஷ் பயன்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை சீரழிப்பதற்கு பதிலாக, நமது மூதாதையர் பயன்படுத்தியது போல வேப்பங்குச்சியை மென்று துப்பினால் பற்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறக்கும்.

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்!!




🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும். கண்கள், உடல் பலம்பெறும்.

🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

🌿முளைக்கீரை- பசியை
 ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.

🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.

🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும்.

உடல் சோர்வு நீங்க:




🍵 குளிர்ந்த நீரில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து, அதிகாலை வேளையில், சில நாட்கள் தொடர்ந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.

🍵 முருங்கைகீரையை காம்புடன் ரசம் வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் அசதி குறையும்.

🍵 பலாப்பழத்துடன் சிறிது கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.

🍵 ஒரு டம்ளர் அண்ணாசிப் பழச்சாறுடன், மிளதுத்தூள் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் சோர்வு குறையும்.


🍵 கம்பை கூழாக்கி அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடையலாம்.

🍵 உலர்ந்த திர்ட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம், முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

🍵 பேரிச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, ஊறிய பேரிச்சம் பழத்தையும், அந்த தண்ணீரையும் குடிக்க சோர்வு குறையும்.

🍵 அகத்திக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெற்று சுறுசுறுப்புடன் இருக்கும்.

கை, கால் வலி குணமாக:




🍵 சுக்கு, ஆவாரம் பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிதளவு நீர் விட்டு காய்ச்சி ஆற வைத்து குடித்துவந்தால், கை, கால் வலி குணமாகும்.

⚡️ பெருங்காயத்தை நல்லெண்ணெயில் சுட வைத்து, இளம் சூட்டுடன் காலில் தடவினால் கால்வலி குறையும்.

🍵 சுக்கு, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, 200 மில்லி தண்ணீரில் காய்ச்சி, நன்றாக ஆற வைத்து குடித்து வர, கை, கால் வலி போகும்.

⚡️ முருங்கை பட்டை மற்றும் சுக்கு இவற்றை ஊற வைத்து, பின்பு அதை நன்றாக மைய அரைத்து கால் வலி ஏற்பட்ட இடத்தில் பூச வலி குறையும்.

⚡️ வேப்ப எண்ணையுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து ஊற வைத்து உணர்வில்லா பாகத்தில் சூடு பறக்க தேய்த்து வர கை, கால் உணர்வு திரும்பும்.

🥗 நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கை, கால் வலி வராமலிருக்கும்.

🍶 அமுக்கிராங் கிழங்கை இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டியதும் எடுத்து பாட்டிலில் ஊற்றி தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

🍵 சுக்கு மற்றும் ஆவாரம் பட்டையை சம அளவு எடுத்து தண்ணீரில் காய்ச்சி ஆறவைத்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வர கை, கால் வலி குணமாகும்.

தேங்காய்ப்பாலில் உள்ள நன்மைகள்




தேங்காய்ப்பாலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

தேங்காய் எண்ணெய்யில் சமைத்து சாப்பிட்டால் உணவுகளும் ருசியாக இருக்கும்.

அடங்கியுள்ள சத்துகள்

விட்டமின் சி, விட்டமின் இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது.

மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய்ப்பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்ப்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற உடல் நோய் வராமல் தவிர்க்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சரும எரிச்சல், சோரியாசிஸ், பாக்டீரியாக தொற்று போன்ற பிரச்னைகளுக்கு, தேய்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ, நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து ஆரோக்கியம் பெற, தேங்காய்ப்பாலை மயிர்க்காலில் இருந்து நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து, 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

தேங்காய்ப்பால், ஒரு சிறந்த கண்டிஷனர். பயன்படுத்தும் ஷாம்பூவுடன் சரிபாதி அளவு கலந்து ‘ஹெட் பாத்’ எடுக்க, கூந்தல் மினுங்கும்.

வறண்ட, போஷாக்கு குறைந்த சருமம் உள்ளவர்கள் தேங்காய்ப்பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத் தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க, காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய்ப்பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர, இளமைப் பொலிவு கிடைக்கும்..!

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க




பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்களின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள். இமைகளின் மேல் கலவையைப்பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.


பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

உடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி




தேவையான பொருள்கள் : 

1.நல்லெண்ணெய் 
2.பூண்டு 
3.மிளகு 

செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.

 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். 

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

கரிசலாங்கண்ணி கீரையின் பயன்கள்:




கரிசலாங்கண்ணி கீரை வயல் வரப்புகளிலும் , வயக்கால் ஓரங்களிலும் மற்றும் நீர்ப்பிடிப்புள்ள இடங்களிலும் வளரக்கூடியது. இச்செடியின் காம்புகள் சிவப்பாக இருக்கும். இலைகள் சுரசுரப்பாகவும் நீண்டும் காணப்படும். இதன் பூக்கள் வெள்ளையாக இருக்கும். இதன் வேறொரு வகை செடியின் பூக்கள் மஞ்சளாக இருக்கும் இதை மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று அழைக்கப்படும்.

இந்த கீரையை துவையலாகவும், பருப்புடன் சேர்த்து கூட்டாகவும் செய்து சாப்பிடலாம். இக்கீரை கல்லீரலுக்கு அதிக சக்தியை கொடுக்க கூடியது. கரிசலாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் பிரகாசம் அடையும் மற்றும் கண்களுக்கும் மூளைக்கும் நல்ல குளிர்ச்சியை தரும். 

இந்த கீரை சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் புண்கள் மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த கீரையின் இலையை அரைத்து அதன் மேல் தடவி வர நல்ல பலனை காணலாம். குழந்தைளின் சளிக்கு இந்த கீரை சிறந்து மருந்தாக பயன்டுகிறது.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரையின் இலையை பச்சையாக இடித்து அதனுடைய சாறை எடுத்து காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் ஏழு நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமடையும்.

கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு இதன் இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு அரைத்து மோரில் கரைத்து கொடுத்துவர ஈரல் வீக்கம் குறையுமாம்.

மதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கரிசலாங்கண்ணியின் இலைய வேகவைத்து அதை வடிக்கட்டி காலை மற்றும் மாலை இரண்டு அவுன்ஸ் குடித்துவர நல்ல பலனை காணலாம்.

கரிசலாங்கண்ணிச் சாற்றுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அடுப்பில் இட்டு சூடேற்றி அந்த எண்ணையை தலைக்கு தடவிவர முடி கருத்து நரை ஏற்படுவது மற்றும் முடி உதிர்வதை தடுக்கும் வல்லமை கொண்டது.

100 கிராம் கரிசலாங்கண்ணி கீரையில் உள்ள சத்துக்கள்:
நீர் சத்து = 85%
மாவு சத்து = 9.2%
புரத சத்து = 4.4%
கொழுப்புச் சத்து = 0.8%
கால்சியம் = 62 யூனிட்
இரும்புத் தாது பொருட்கள் = 8.9 யூனிட்
பாஸ்பரஸ் = 4.62%

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம்.




 பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? 

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ.. அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. 

எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு.

 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். 


கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? 

மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும். 

நீங்கள் அணிகிற உடைக்கும்,  கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? 

‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. 

அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். 


இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? 

ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். 

மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும். விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.

ஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வைத்தியம்.



உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவு பொருட்களும், பழக்க வழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவு பொருட்களில் காய்கறிகள் 🥒🥕மற்றும் பழங்கள் 🍇 போன்றவை பெரிதும் உதவியாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் நெல்லிக்காய். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் 🍈 என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது.

அதனால் தான் ஆயுர்வேதத்தில் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் நெல்லிக்காயால் செய்யப்படும் ஜூஸ் சற்று துவர்ப்பாக இருக்கும். துவர்ப்பு உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணரமுடியும். நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை கீழே பார்க்கலாம்.


நீரழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்று தேன் சேர்த்து கலந்து குடித்தால் நல்லது. நீரழிவு நோயை கட்டுப் படுத்தும்.

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையானது குறையும்.

நெல்லிக்காய் சாற்றில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்துவிடலாம்.

நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடிக்கும் போது, ரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

கோடைக்காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாற்றை குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

இதுதவிர ரத்த சோகை, இதய நோய், சரும பிரச்சினை, கண்பார்வை அதிகரித்தல் உள்பட பல்வேறு நன்மைகள் உள்ளது.

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?




👉பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்

👉பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.

👉மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

👉எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

👉நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

👉ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

👉ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

👉தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.

👉இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.

👉கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.

👉தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

குளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வழிகள்..!




•• குளிர்காலத்தில் தவறாமல் கை, கால்களுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும். அதற்காக மிகுந்த எண்ணெய் பசை கொண்ட மாய்சுரைசரைப் பயன்படுத்தாமல், ஜெல் அல்லது க்ரீம் வகை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவது சிறந்தது.

•• குளிர்காலத்தில் தினமும் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் சரும செல்களுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட செல்களும் புத்துயிர் பெறும்.

•• குளிர்காலத்தில் பலரும் நல்ல சூடான நீரில் குளிக்கத் தான் விரும்புவோம். ஆனால் சுடுநீர் சரும வறட்சியை அதிகரிக்கும். எனவே வெதுவெதுப்பான நீரையே எப்போதும் பயன்படுத்த வேண்டும்.

•• குளிர்காலத்தில் தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாகவும் பொலிவுடனும் இருக்கும். அதிலும் ஓட்ஸ், காபி பவுடர் போன்றவற்றைக் கொண்டு ஸ்கரப் செய்வது மிகவும் நல்லது.

•• கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான நட்ஸ், மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை வயிற்று உப்புசத்தையும், முகப்பருக்களையும் உண்டாக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..!



குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிரும் இரட்டைக் குழந்தையென்றால் அதீத கவனம் தேவை. இரண்டு குழந்தைகளுக்குமான உணவு, நீர், சுவாசம் என அத்தனையையும் தாய் நிறைவேற்ற வேண்டும்.

அதனால் நேரத்துக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் சிகிச்சை முறைகளை முயைாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரெட்டை குழந்தைகளை சுமர்ப்பவர்களுக்கு அதிக அளவில் வாந்தியும் குமட்டலும் வந்து அலைக்கழிக்கும். அதிகாலையில் தூங்கி எழும் முன்பே இந்த தொல்லை ஆரம்பித்துவிடும்.

வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியால் சாப்பிடவே வேண்டாம் என்பது போல் ஆகிவிடும்.

வாந்தி என்பது கர்ப்ப காலத்தில் சகஜமாகக் காணப்படுகிற ஒன்று தான் என்றாலும், இரட்டைக் கருவை சுமப்பவர்களுக்கு அந்த உணர்வு மற்றவர்களை விட மிக அதிகமாகவே இருக்கும்.

கர்ப்பம் உறுதியாகிற வரை மிகவும் பிடித்திருந்த உணவின் வாசனை, கர்ப்பம் தரித்த பிறகு மிக மோசமான வாசனையாகத் தோன்றும்.

இந்த லிஸ்ட்டில் காபி, டீக்கு முதலிடம். இரட்டைக் கரு உருவாகியிருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களிலேயே கர்ப்பிணிகளின் எடையில் கூட ஆரம்பித்துவிடும்.

அப்படி அதிகரிக்கிற எடை என்பது வெறும் குழந்தைகளின் எடை மட்டுமின்றி, உடலில் சேருகிற அதிகப்படியான திசுக்கள், திரவம் மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் சேர்த்தது தான்.

வழக்கமாக கர்ப்பிணிகளுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கிற வயிறு, இரட்டைக் கர்ப்பம் சுமப்பவர்களுக்கு இன்னும் சீக்கிரமே தெரியும்.



அடுத்தடுத்த மாதங்களிலும் வயிற்றின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும்.

உள்ளாடை அணிய முடியாத அளவுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்ப காலத்தில் சகஜம். ஆனாலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது, அந்த உணர்வு இன்னும் தீவிரமாகும்.

அளவுக்கு மிஞ்சிய களைப்பு உண்டாகும். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பதே போராட்டமாகத் தெரியும். பிரசவ ஹார்மோன் என்று சொல்லக்கூடிய Chorionic Gonadotropin Hormone அளவு மிக அதிகமாக இருக்கும்.

இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற முதல் சிறுநீர் சோதனையிலேயே தெரியும். கர்ப்பப்பை விரிவடைவதன் விளைவாக, இரட்டைக்கரு உருவான பெண்களுக்கு கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு மாதிரியான உணர்வு உண்டாகும்.

இதயத்துடிப்பில் வேகம் தெரியும். சாதாரண நிலையில் 70 முதல் 80 வரை இருக்கும் இதயத்துடிப்பானது, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு 95 முதல் 105 வரை கூட எகிறும்.


காரணமே இல்லாமல் திடீரென அழுகை, தடுமாற்ற மனநிலை போன்றவையும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

ஒரு குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அளவோடு இருக்கும் இந்த உணர்வுகள், இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தென்படும்.

குழந்தைகளின் அசைவைக் கூட சீக்கிரமே உணர்வார்கள் இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்கள்.

உங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு? அதுக்கு என்ன அர்த்தம்? தெரிஞ்சிக்கோங்க!




சிறுநீர், மலம் என்பது நம் உடலில் இருந்து தேவையற்ற கழிவுப் பொருட்களாக வெளியேற்றப்பட்டாலும், அதை வைத்து நம்முடைய உடலில் உள்ள நோய் பற்றியும் அறிந்துக் கொள்ள முடியும். அதனால் தான் நாம் மருத்துவமனைக்குச் சென்றால் உடனடியாக ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மலப்பரிசாதனை ஆகியவற்றுக்குப் பரிந்துரைக்கிறார்கள

அதில் சிறுநீரைப் பொருத்தவரை, அது வெளியாகும் நிறத்தை வைத்தே உடலில் எந்த உறுப்புகளில் நோய்த் தொற்றுக்ள இருக்கும் என்பதைக் கண்டுபிடித்விட முடியும்.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முறை சிறுநீர் கழிப்பது சாதாரண இயல்பான ஒன்று தான். அதைவிட அதிகமாகவோ குறைவாகவுா சிறுநீர் கழித்தல் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியக் குறைபாடாக உள்ளது என்பது பொருள்.

ஒருவரின் சிறுநீரின் நிறத்தை வைத்தே அவர்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும்.

⚪️ வெள்ளை

வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், சுத்தமாக உள்ளது என்றும் அவர்களின் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது

💡 வெளிர் மஞ்சள்

வெளிறிய மஞ்சள் நிறத்தில் சிறுநீர்6 கழித்தால், அது அவர்களின் உடம்பில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளதை வெளிப்படுத்துகிறது.

🔶 அடர் மஞ்சள்

மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால், அது அவர்களின் உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது என்பதன் அறிகுறி.

🏷 பழுப்பு சிறுநீர்

பழுப்பு நிறத்தில் ஒருவர் சிறுநீர் கழித்தால், அது கல்லீரல் தொற்று மற்றும் அவர்களின் உடம்பில் பழைய ரத்தம் உள்ளது என்று பொருள்

🔴 சிவப்பு அல்லது பின்க்

தூய இரத்தம் சிறுநீரில் கலந்து வருகிறது என்றும் சிறுநீரக கோளாறு மற்றும் புற்றுநோய் பிரச்சனை உள்ளது என்றும் அர்த்தம்.

🔵 நலம் அல்லது பச்சை

நீலம் அல்லது பச்சை நிறத்தில் சிறுநீர் வெளியேற்றப்பட்டால், அது அவர்கள் தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் மற்றும் உணவில் அதிகப்படியான சாயம் கலந்திருக்கிறது என்பதைக் குறிக்கும்.

சிறுநீர் கழிக்கும் போது, இனிப்பு வாசனை தென்பட்டால், அது அவர்களுக்கு நீரிழிவு மற்றும் சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாகும்.

பாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்




பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில்  நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு  தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்ர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது  நேரம் வைத்திருந்து பின் பாதத்தை சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து  விடும். இதனால் வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.  


வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு  உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள்  வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.

விளக்கெண்ணெய்  தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில்  வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து  பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

இரவு நேரத்தில் முங்க செல்லும் முன் காரல நன்றாக கழுவி சிறிது தேங்காய் எண்ணெய் தடவினால் நல்லது. தினமும் குளித்து முடித்ததும்  பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின் பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்

உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்,

TV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு காலக்கெடு நீடிப்பு….


தொலைக்காட்சி சேனல்களை சந்தாதாரர்களின் விருப்ப படி தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கான காலக்கெடு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கூறியுள்ளது


இந்திய தொலை தொடர்பு ஆணையமான டிராய் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தொலைகாட்சி சேனல்களை சந்தாதாரர்கள் விருப்ப படி தேர்வு செய்யும் நடைமுறை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், சந்தாதாரர்களின் நலனை கருதி இந்த காலக்கெடு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டதாகவும், பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டதாக டிராய் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் சுமார் 10 கோடி கேபிள் டிவி சந்தாதாரர்களில் 65 சதவிகிதம் பேரும், 6.7 கோடி டி.டி.எச். சந்தாதாரர்களில் 35 சதவிகிதம் பேரும் புதிய நடைமுறைக்கு மாறி விட்டதாக டிராய் கூறியுள்ளது. ஆனாலும், தொலைக்காட்சி சேனல்களை சந்தாதாரர்களே தேர்வு செய்யும் நடைமுறை புதியது என்பதால் சிலருக்கு தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளது என்றும், சில இடங்களில் சந்தாதாரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையும், அவர்களுக்கு விருப்ப தேர்வு முறை குறித்த விழிப்புணர்வை கொண்டு வர முடியாத நிலையும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சில இடங்களில் இணைய வசதி இல்லாத சந்தாதாரர்கள் அல்லது இணையத்தை பயன்படுத்தி விருப்ப தேர்வை செய்ய இயலாத சந்தாதாரர்கள், நேரடியாக கேபிள் நிறுவனத்தையோ, டி.டி.எச். நிறுவனத்தையோ நாடும் நிலை உள்ளது என்றும், வெகு சில இடங்களில் சந்தாதாரர் விருப்ப தேர்வு செய்யாமலேயே கட்டண சேனல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளதாகவும் இந்த நிலைபாடுகள் சந்தாதாரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் டிராய் குறிப்பிட்டுள்ளது.
புதிய நடைமுறைக்கு மாறும் போது சந்தாதார ர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படுவதை விரும்பவில்லை என்று டிராய் கூறியுள்ளது. விருப்ப தேர்வு முறைக்கு மாறாத சந்தாதாரர்களையும் மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் , இதில் யாருக்கும் எந்த சிரம மும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆபரேட்டர்கள் தெரிவித்ததை டிராய் குறிப்பிட்டுள்ளது. இதுவரை புதிய நடைமுறைக்கு மாறாத சந்தாதாரர்களுக்கு ஏற்ற மிகச்சரியான திட்டத்தை வடிவமைக்குமாறு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக டிராய் கூறியுள்ளது.
மிக சரியான திட்டத்தின் கீழ் சந்தாதாரர் வழக்கமாக பார்க்கும் சேனல்கள், அவரது விருப்பமான மொழி சேனல்கள் மட்டுமின்றி பல்வேறு விதமான சேனல்களும் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஏற்கனவே சந்தாதாரர் செலுத்தும் மாதக் கட்டணத்தை விட கூடுதலாக சந்தா தொகை இருக்க கூடாது என்றும் டிராய் கட்டளை இட்டு உள்ளது. சந்தாதாரர்களின் நலன் காக்கும் பலமுனை நடவடிக்கைகளை ஆபரேட்டர்கள் எடுக்க வேண்டும் என்றும், நேரடியாக சந்தாதார ர்கள் அணுகுவது, தொலைபேசி மூலம் விளக்கம் அளிப்பது, உதவி மையம் மூலம் தொடர்பு கொள்வது, செல்போன் செயலிகள் மூலம் வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, இணைய தளத்தில் வசதிகளை உருவாக்குவது என பலமுனை நடவடிக்கைகளை ஆபரேட்டர்கள் எடுக்க வேண்டுமென டிராய் வலியுறுத்தி உள்ளது.
சந்தாதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு விருப்பபடி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிராய் தெரிவித்துள்ளது. மேலும் சந்தாதாரர்கள், தங்களின் சுய விருப்பத்தின் படி சேனல்களை தேர்வு செய்த 72 மணி நேரத்திற்குள் அவர்களுக்கான திட்டத்தை ஆபரேட்டர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் டிராய் வலியுறுத்தி உள்ளது.