Monday, August 1, 2011

உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் !

என்று  ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா .


பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது .

சமீபத்தில் போஸ்டன் நாளிதழில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு .

1 .ஆப்கானிஸ்தான்


பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .

2 .காங்கோ


உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4  லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் .

3 .பாகிஸ்தான்


மத ரீதியான வன்முறைகள் ,திராவகம் வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது .குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன .

4 .இந்தியா

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .கடந்த நூற்றாண்டில்  பாலியல் தொழிலுக்காக மட்டும் 50  லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இவர்களில் 40  சதவீதம்பேர் பருவ வயதை எட்டாதவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம் .

5 .சோமாலியா



பெண்களுக்கெதிராக அதிக பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன .பெண் கல்வி ,சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ள நாடு .

பெண்களுக்கெதிரான இந்த தீமைகள் குறைந்தால்தான் உலகம் செழிக்கும் .

சாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் !


இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு 1,20,000 பேர்  சாலை விபத்துக்களில் பலியாகின்றனர் .இது கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு அணு குண்டு இந்தியாவில் வீசப்பட்டால் பலியாவோரின் எண்ணிக்கைக்கு சமம் .உலக அளவில் முதலிடம் .இதற்கு காரணங்கள் என்ன இதற்க்கு தீர்வு  என்ன என்பது குறித்த ஓர் அலசல்.


1 .வாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒவ்வொரு வருடமும் வாகனங்களின் எண்ணிக்கை அளவுக்கதிகமாக அதிகரித்து வருகிறது .குறிப்பாக சிறிய ரக கார்கள் இரு சக்கர வாகனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அதிகரித்துள்ளது .வாகன நெரிசல் காரணமாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :பேருந்து வசதிகள் அனைத்து ஊர்களுக்கும் தேவையான அளவில் தேவையான நேரத்தில் செய்யப்படவேண்டும் .

2 .வேகம்
பல வாகன ஓட்டிகள் நிதானமான வேகத்தை கடை பிடிப்பதில்லை.வேகமாக ஒட்டுவதால் அவர்களுக்கும் அதை விட அதிகமாக பிறருக்கும்  பிரச்சினைகள் ஏற்படுகின்றன .

நிவாரணம் :அளவுக்கதிகமாக வேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் ,வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு தேவை .


3 .ஓட்டுனர் உரிமம்

வாகனகள் ஓட்ட தெரியாதவர்களுக்கு உரிமம் அளிப்பதால் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன .அடிப்படையான சாலை விதிகள்கூட பலருக்கு தெரிவதில்லை .

நிவாரணம் : தகுதியில்லாதவர்களுக்கு  ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .


4 . தூக்கம்

அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடப்பது இரவு 12 மணியிலிருந்து அதிகாலை மணிக்குள் .இதற்கு காரணம் போதிய ஓய்வின்றி ஓட்டுனர்கள் வாகனம் ஓட்டுவதுதான்.

நிவாரணம் :ஓட்டுனர்கள் தேவையான அளவு தூங்கி ஓய்வெடுக்கவேண்டும் .நீங்கள் ஓய்வெடுக்காவிட்டால் பலர் நிரந்தரமாக ஓய்வெடுக்கவேண்டியது வரும் .நீண்ட தூர பிரயாணங்களுக்கு கண்டிப்பாக இரு ஓட்டுனர்கள் இருக்க வேண்டும் .


5 .குடி போதை

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துக்கள் நிகழ்கின்றன .

நிவாரணம் : பல சாலை விபத்து வழக்குகளில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய விஷயம்  சேர்க்கப்படுவதில்லை என்பது பலரது புகாராக உள்ளது .குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும் .நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகளை அகற்றவேண்டும் .


6 . தரமற்ற வாகனங்கள்
 
காலாவதியான வாகனங்களை ஓட்டுவதால் ஓட்டுனர் திறமையானவராக இருந்தாலும் விபத்தை தடுக்க இயலாமல் போய் விடுகிறது .
 
நிவாரணம் : தகுதியில்லாத வாகனங்களின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்யவேண்டும் .காலாவதியான அரசுப்பெருந்துகளை இயக்குவதை தவிர்க்கவேண்டும்

7 .பழுதடைந்த சாலைகள்
 
குண்டும்  குழியுமான  சாலைகளும் பல விபத்துக்கு காரணமாகின்றன .
 
நிவாரணம் :பழுதடையும் சாலைகளை உடனடியாக துறை சார்ந்தவர்கள் சரி செய்ய வேண்டும் .
8 .பொதுமக்கள் அலட்சியம்   

சாலை விதிகளை பொதுமக்கள் மீறுவது போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடப்பது வளர்ப்புப் பிராணிகளை சாலையில் நடமாட விடுவதும் விபத்துக்களுக்கு காரணமாகிறது .
 
நிவாரணம் :பொதுமக்கள் விழிப்புணர்வு

9 .சாலைகள் வடிவமைப்பு
 
புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் வடிவமைப்பு குறை பாடுகளாலும் சில விபத்துக்கள் நேரிடுகின்றன .
 
நிவாரணம் :தேர்ந்தவர்களை கொண்டு சாலைகளை வடிவமைக்கவேண்டும்
10 . ஆக்கிரமிப்பு   சாலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கடைகள் கட்டுவதால் வாகன நெரிசல் அதிகமாகி விபத்துக்கள் நேரிடுகின்றன.பொதுமக்கள் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன .
 
நிவாரணம் : ஆக்கிரமிப்புகளை பார பட்சமின்றி அகற்றவேண்டும் .
 டிஸ்கி :நான் அறிந்தவற்றை பகிர்ந்துள்ளேன் .புதிய ஆலோசனைகளை பதிவர்களும் வாசகர்களும் கருத்துரை மூலமாக அளிக்கலாம் .

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை !

A \C  கார் பயன்படுத்துபவரா  நீங்கள் .அப்படியானால் நீங்கள் இதை கண்டிப்பாக படிக்கவேண்டும் .

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  ஐ இயக்கவேண்டும் .

இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C  ஐ  ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க .

எச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் !

உலகம் முழுவதும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன .குற்றம் புரிபவர்கள் பல நவீன உக்திகளை கையாளுவதால் அவர்களை கண்டு பிடிக்கவும் பல நவீன வசதிகள் வந்துள்ளன .
இவற்றில் முக்கியமானவை இரகசிய கேமராக்கள் .
நல்ல காரியங்களுக்கு பயன்படும் இக்கேமரா சில தீயவர்களாலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது .இது குறித்து எச்சரிக்கவே இப்பதிவு .
கைக்கடிகாரத்தில் இரகசிய கேமரா
சிகரெட் லைட்டரிலும் உள்ளது 


அதி நவீன பேனா கேமரா


 தொப்பி வைக்க தொப்பியிலும் கேமரா 
இந்த கூலிங்கிளாசை போட்டிருப்பவர் எதை படமெடுக்கிறார்  என்பதை நீங்கள் அறிய முடியாது 

 டையிலும்   கேமரா 

 கூல் டிரிங்க்ஸ் ல் கேமரா 

 உங்களை கணக்கு பண்ண  கால்குலேட்டரில்

உங்களை படம் பிடித்து வளைக்க பெல்ட்டில் கேமரா


எச்சரிக்கை : விளையாட்டாகக்கூட கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு டெரராக பேசாதீர்கள்

1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா ?!

மக்கள் இண்டர்நெட்டை உபயோகிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தார்கள் இன்று இன்டர்நெட் பயன் பாட்டிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது .

60வினாடிகளுக்குள் இன்டர்நெட் உலகில் என்ன சமாச்சாரமெல்லாம் அரங்கேறுகிறது என்பதை பார்ப்போம் .

1 .உலகின் முதல் நிலை தேடுதல் எந்திரமான கூகுள் 6,94,445 விசாரணைகளுக்கு பதிலளிக்கிறது .

 கூடுதல் தகவல் : இனி அதிக அளவில் தகவல்களை கூகுளிடம் விசாரணை செய்பவர்களிடம் கூகுள் குறுக்கு விசாரணை செய்யவிருப்பதாக அமெரிக்காவிலிருந்து  வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன !?


2 . 16,80,000,00 E mail கள் அனுப்பப்படுகின்றன .

கூடுதல் தகவல் :தபால்துறை பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதால் இந்தியாவில் E mail அனுப்புவதை தடை செய்யக்கோரி விரைவில் தபால் துறையினர் போராட்டத்தில் இறங்க உள்ளதாக புது டில்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

3 . 5,10,040 comment கள் Face book ல் வெளியாகின்றன .
கூடுதல் தகவல் :இவற்றில் 90 சதவீதம் கமெண்ட்கள் டெம்ப்ளேட் கமெண்டுகள் என்பதை  விக்கிலீக்ஸ் விரைவில் அம்பலப் படுத்த உள்ளதாக சுவீடனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

4 . 25  மணி நேரம் ஓடக்கூடிய 600  வீடியோ கிளிப்புகள் youtube  தளத்திற்கு தரவேற்றம் செய்யப்படுகின்றன .
கூடுதல் தகவல் :வழக்கம் போல பலான வீடியோக்கள்தான் அதிக அளவில் தரவேற்றம் செய்யப்படுவதாக பாரிசிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன ?!

5 . 3,70,000 நிமிடங்களுக்கான குரல் அழைப்புகள் Skype தளத்தின் மூலம் பகிரப்படுகிறது .
கூடுதல் தகவல் :இனி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓசியில் கதைப்பவர்களின் மைக் துண்டிக்கப்படும் என்று லண்டனிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன




டிஸ்கி :பிளாக்கர்கள் குறித்தும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது .பிளாக்கர்களின் மன நலனை கருத்தில் கொண்டு கூகுள் அத்தகவலை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாமிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியத்னாம் - ஹாலாங்(1)

வணக்கம் நண்பர்களே.........இந்த முறை உங்களை அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......

இந்த இடத்துக்கு பேரு ஹாலாங்............இது ஒரு அழகான சுற்றுலாத்தலம்.......இங்க 1960 திட்டுக்கள் இருக்கு..........இது பல கனிமங்கள் இருக்கும் இடம்........ஆனால் இந்த அரசாங்கம் இந்த இடத்த பத்திரமான இடமாக பாதுகாத்திட்டு வருது..........


இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............


பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......


அமைதியான இந்த இடமும் சுற்றிலும் அழகான தோற்றமுடைய திட்டுக்களும் கண் கொள்ளாக்காட்சி........


ஹலோங்கில் இருக்கும் குகை மிக சிறப்பான ஒன்றாகும்.........பவழங்கள் இருக்கும் குகை இது.............பல போர் காலங்களில் இதன் உள் இருந்து கொண்டு சீனர்களை ஓட விட்டுள்ளனர்..........




இந்த படகில் வரும் வெளி நாட்டவர் இங்கு நீச்சலடிக்க மிகவும் விரும்புவர்........


பல நாட்டு மக்கள் வந்து போகும் இடம் இந்த ஹாலாங்............


படகுல வந்து வியாபாரம் பண்ணுவாங்க...............


இதுவரை வரலாறு.......இது தனி ஹிஹி!..........


தொடரும்.......

கொசுறு: என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!).............என்னய்யா பதிவு வேற பக்கமா போகுது ரைட்டு.....சாரிபா!......படங்களுக்கு உதவிய Google லுக்கு நன்றி!

மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு  காரணம் மனித மூளையின் சக்திதான் .
இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற  மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்)  தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .
ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .
நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்"  மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும்  மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .
மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள்  மூளையில்  இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை  பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால்  கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக  பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .
சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும்  (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .
இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
இதைத்தான்  நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .
நன்றி : Dailymail ,UK.

அறிந்த விஷயமும் அறியாத செய்தியும்.......



வீரர்கள் மலையேற்றத்தின் போது முன்பக்கம் வளைந்தவாறு ஏறுவதும் இறங்குகையில் பின் பக்கம் சாய்ந்தவாறு இறங்குவதும் ஏன்?


நாம் நேராக நிற்கையில் (நிமிர்ந்து) புவி ஈர்ப்பு மையம் நமது இரு கால்களுக்கிடையே அமைந்து சரியான சமநிலையில் நிற்க முடிகிறது. சமதளத் தரையின் மீது நடக்கத் தொடங்கும்போது, புவி ஈர்ப்பு மையமும் நடக்கும் திசை நோக்கி நகர்கிறது.



இருப்பினும் அதன் சமநிலையில் மாற்றம் ஏதும் உண்டாவதில்லை. ஆனால், மலையேறும்போது புவி ஈர்ப்பு மையம் முன்னோக்கி இடம்பெயர்வதுடன் அதன் சமநிலையிலும் ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இதனைச் சமன்செய்யும் பொருட்டு உடலை முன்னே சாய்த்து மலையின் மீது ஏறுகின்றனர்.



இதேபோன்று மலை மேலிருந்து கீழே இறங்கும்போது புவி ஈர்ப்பு மையமும் பின்பக்கம் இடம்பெயர்கிறது. சமநிலையிலும் வேறுபாடு நிகழ்கிறது. சரியான சமநிலைக்குக் கொணரும் பொருட்டு, பின்னோக்கிச் சாய்ந்தவாறு கீழிறங்கி வரவேண்டியுள்ளது.


***


தீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்படி?


தீயணைப்புப் படையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உடையே பயன்படுகிறது. ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் எளிதில் தீப்பிடிக்காது என்பதை நாம் அறிவோம். இதே ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) கொண்டுதான் தீயணைப்பு வீரர்களின் உடை தயாரிக்கப்படுகிறது.



இவ்வுடையின் மேல் சில்வர் பூச்சுக் கொடுக்கப்படுவதால் தகிக்கும் வெப்பம், ‘தீ’ எதிரொளிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. இப்படியாக பெரும் தீக்குள் எந்தவிதத் தடுப்புமில்லாமல் சென்று ஆபத்தில் உள்ளோரைக் காக்க முடிகிறது.



தீ சூழும்போது ஆக்சிஜன் குறைந்து இணி2 அதிகரிப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்படும். இதனால் இம்மாதிரி உடைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டரும் தயாரிக்கப்படுகிறது.



***


மழை பெய்யும் போது சில வேளைகளில் மழைத்துளிகளோடு, ஐஸ் கட்டிகளும் விழுகின்றதே, ஏன்?

ஆங்கிலத்தில் ‘ஹெயில் ஸ்டோன்ஸ்’ என இந்த ஆலங்கட்டி மழையை அழைப்பார்கள். மழைத்துளிகள் ஈர நைப்பான மேக அடுக்குகளில் மேல் நோக்கி உந்தப்படும்போது, இப்படி ஆலங்கட்டிகளாக மாறுகின்றன.மழைத்துளிகளாக உருவாகி கீழே விழும் நிலையில் கீழே விழாமல் தொடர்ந்து, இவற்றை மேல் நோக்கித் தள்ளப்படும்போது, இத்துளிகளைச் சுற்றி புதிய ஈரம் (நைப்பு) மூடிக்கொள்ள இது கெட்டியாகி விடுகிறது.



பெரிய ஆலங்கட்டியை இரண்டாகப் பிளந்து ஆராய்ந்தால் பல அடுக்குகளைக் காணலாம். ஆலங்கட்டிகள் உருண்டையாகத்தான் இருக்கும். பனித்துகள் (ஸ்ரோஃப்ளேக்ஸ்) எப்போதும் அறுகோணப் படிகங்களாகக் காணப்படும். மாரிகாலத்தில் பனிமழை பெய்யும். ஆனால் ஆலங்கட்டி மழை வருஷத்தில் எந்தப் பருவத்திலும் பெய்யலாம்.



***


ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் ஓசை பாலத்தைக் கடக்கும்போது மாறுபடுவது ஏன்?

ஒரு ரயில் அதன் பாதையில் செல்லும்போது மூன்று காரணங்களால் ஓசை உண்டாகிறது. முதலாவது தண்டவாளத்துக்கும் ரயிலின் சக்கரத்துக்கும் உள்ள உராய்வு.



இரண்டாவது இரண்டு தண்டவாளத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் சக்கரத்தினால் ஏற்படும் விளைவு.தண்டவாளத்தில் உள்ள ஸ்வீப்பர் கட்டைகள் ஜல்லிக் கற்களின் மீது நன்கு பதிக்கப்பட்டிருப்பதால் அதன் அதிர்வுகள் குறைகின்றன. அதன் ஓசையும் பூமியினுள் உறிஞ்சப்பட்டு விடுகின்றன.



ஆனால் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது இந்த ஸ்வீப்பர் கட்டைகளும் அதைத் தாங்குகிற தூண்களும் பூமியின் மீது பதிக்கப்படாததால் அதன் அதிர்வுகள் அதிகமாகி ஓசையும் அதிகரிக்கிறது.



உள்ளீடற்ற தன்மையாலும் அதிர்வு ஓசை தரையிலும் நீரிலும் எதிரொலிக் கப்படுவதாலும் ஓசை இன்னும் அதிகரிக்கிறது.


***


படித்ததில் பிடித்தது

***

கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை !!!



இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்


ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.



இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.



அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர்.



போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.



பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்



டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்.



பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..

ஆழ்கடல் அதிசயம்

ஆழ்கடலின் ஆழம் காணலாம், ஆனால் அங்கு வாழும் உயிர்களின் முழுக்கணக்கு இன்னும் நமக்கு முழுமையாய் தெரியவில்லை. சமீபத்தில் 5000 மீ ஆழமுள்ள பிலிபைன்ஸ் கடலில் 2800 மீ-ல் பல அதிசய உயிரினங்களைக் கண்டுள்ளனர். ஆழ்கடல்தான் அனைத்து உயிரினங்களின் தொட்டில் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். காற்றாட கடற்கரையோரம் நடந்து பழகும் மனிதனின் ஆதி முன்னோர்கள் கூட அங்கிருந்து வந்தவர்களே! அறிவியல் பயணம் முடிவுறாத வண்ணம் இயற்கை பல அதிசயங்களை பல இடங்களில் ஒளித்து வைத்துள்ளது! சில ஆச்சர்யமான உயிர்களை படத்தொகுப்பாக கண்டு களியுங்கள்: