Monday, August 1, 2011

உலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் !

என்று  ஒரு பெண் இரவில் தனியாக ஊருக்குள் நடமாட முடிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் என்றார் தேசப்பிதா .


பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது .

சமீபத்தில் போஸ்டன் நாளிதழில் உலகிலேயே பெண்களுக்கு அதிக தீங்கிழைக்கும் சில நாடுகளின் பட்டியல் வெளியானது .இப்போது அது உங்கள் பார்வைக்கு .

1 .ஆப்கானிஸ்தான்


பெண்களுக்கெதிராக அதிக வன்முறைகள் நிகழும் நாடு .மோசமான பொருளாதார சூழ் நிலைகள் சுகாதார சீர்கேடு போன்றவற்றால் இங்குள்ள பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் .

2 .காங்கோ


உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4  லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் .

3 .பாகிஸ்தான்


மத ரீதியான வன்முறைகள் ,திராவகம் வீச்சு பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிறது .குழந்தை திருமணங்கள் அதிகம் நிகழ்கின்றன .

4 .இந்தியா

பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் கடத்தப் படுகிறார்கள் .கடந்த நூற்றாண்டில்  பாலியல் தொழிலுக்காக மட்டும் 50  லட்சம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் இவர்களில் 40  சதவீதம்பேர் பருவ வயதை எட்டாதவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம் .

5 .சோமாலியா



பெண்களுக்கெதிராக அதிக பாலியல் வன்முறைகள் நிகழ்கின்றன .பெண் கல்வி ,சுகாதாரம் மிகவும் குறைவாக உள்ள நாடு .

பெண்களுக்கெதிரான இந்த தீமைகள் குறைந்தால்தான் உலகம் செழிக்கும் .

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .