Sunday, February 10, 2019

எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்!

* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.
‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்துவிட்டதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாளே வராது.
எப்போதும் பாசிட்டிவ் மனிதர்கள் பக்கத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். ஆனால், நெகட்டிவ் மனிதர்கள் எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையுடன் காத்திருப்பார்கள்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தாம்.சூழ்நிலையை மாற்றுங்கள்… அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்.
மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம், உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது.
உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கிறபோதுதான் கவலை அதிகரிக்கிறது. இருப்பவற்றை மட்டும் நினைத்துப்பாருங்கள்; மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.
ஒரு நல்ல செய்தி… ஒரு கெட்ட செய்தி தெரியுமா? கெட்ட செய்தி – இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல செய்தியும் அதுவே.
கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதது, இருப்பதை நினைத்து நன்றியுணர்வு கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையோடிருப்பது – மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை.

பப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறுவன் தற்கொலை..!



ஸ்மார்ட் போன்களில் அவ்வப்போது வெளிவரும் விளையட்டுக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப்ளூவேல் கேம் பெரம் வைரலாக பரவியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் கிளம்பியது. 

இதனால் அரசு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்தது. அதையும் மீறி சிலர் விளையான்டு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் பின் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு இந்த விளையாட்டு மீதான மக்களிடையே உள்ள ஆர்வம் ஒரளவிற்கு குறைந்தது. 


இந்நிலையில் தற்போது புதிதாக இளைஞர்களின் மனதை கெடுக்க வந்துள்ள விளையாட்டு பப்ஜி. இந்த விளையாட்டு லைவ்வாக மற்றவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே விளையாடும் விளையாட்டு என்பதால் இதை விளையாடுபவர்களை இதற்கு அடிமையாக்கி விடுகிறது. இப்படியாஜ பப்ஜிவிளையாட்டில் அடிமையாகிபோயுள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர். 


இந்நிலையில் மும்பையில் 18வயது சிறுவன் தனது பெற்றோரிடம் பப்ஜி விளையாடுவதற்காக ரூ 37 ஆயிரம் மதிப்பிலான போனை வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அவர்கள் பெற்றோர் மறுத்துள்ளனர். 

இதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுவன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செல்போன் கேம் மீது உள்ள மோகம் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒருவரை அடியமையாக்கி வைத்துள்ளது. 


தற்போது இந்த சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலர் மத்தியில் இந்த பப்ஜிக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். 

துளசியின் மருத்துவ குணங்கள்




காடுகளில் வளரக்கூடிய அபூர்வ மருத்துவ குணங்கள் வாய்ந்த செடி துளசி. துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வராது. செரிமானம் அதிகரிக்கும், புத்துணர்ச்சியையும் துளசி மூலம் பெற முடியும். அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிப் பார்ப்போம். 

துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் வராமல் தடுக்கலாம். 

கோடை காலங்களில் உடலின் வியர்வை துற்நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். 

தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.




சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். 

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. 

துளசி இலை சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். 

பெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக் கணக்குகளை பாதுகாப்பது எப்படி! நிச்சயம் தெரிந்துகொள்ளுங்கள்


சமீபகாலமாக ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP) என்று அழைக்கப்படும் கடவுச்சொல்லை வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து திருடுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்குகளில் அவர்களுக்கு தெரியாமலேயே பண பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு பணம் திருட்டு நடைபெறுவது பெருகி வருகிறது. இந்த வகையான திருட்டில் இருந்து எப்படி மீள்வது, தப்பிப்பது
என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
இணைய மற்றும் மொபைல் வங்கி சேவைகளுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாக இருந்து வருவதுதான் ஒன் டைம் பாஸ்வேர்டு(OTP). இந்த கடவுச்சொல் ஆனது பெரும்பாலும் 4 முதல் 6 இலக்கத்தில் ஒரு நபர் தனது வங்கி பரிவர்த்தனைகளை செய்யும்பொழுது அவரது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த கடவு எண்ணை சரியாக உள்ளீடு செய்தால் மட்டுமே பரிவர்த்தனை முழுமை அடையும் வகையில் அனைத்து வங்கி சேவைகளும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒருவரது மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை அந்த நபருக்கு தெரியாமலேயே திருடுவதன் மூலமாகவோ அல்லது வங்கி அதிகாரி போல் போனில் பேசி ஒரு நபரின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்களை பெற்றும் அப்போது பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வாடிக்கையாளருக்கு வரும் OTP எண்ணை கேட்டு பெறுவதன் மூலம் அந்த நபரின் வங்கி கணக்கை முழுமையாகவே கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சமீபத்தில் அதிகமாகி வருகிறது. 
சமீபத்தில் பெங்களூரில் ஒரு தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் ஒரே போன் காலில் மர்ம நபர் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மும்பை ஜார்கண்ட், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் பெருமளவில் அரங்கேறி வருகின்றன. கேரளாவில் மட்டும் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் இதைப்போன்று திருடப்பட்டுள்ளன. மேலும் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கை 28 முறை வங்கி அலுவலர் போல் பேசி அந்தப்பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளனர்.
இதைப் போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் புதிதாக இணைய வழி வங்கி சேவையை துவங்குவோர், வயதானவர்கள் போன்றவர்களை குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது. இதைப் போன்ற கொள்ளை சம்பவங்களுக்கு முக்கிய காரணியாக இருந்து வந்தது OTP எண்கள் தான். இந்தப் OTP எண்களை இரண்டு வகைகளில் கொள்ளையர்கள் ஒரு நபரிடமிருந்து திருடுகின்றனர். 
அதில் ஒன்று, வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே படிப்பது. மற்றொன்று வங்கி வாடிக்கையாளர்களுக்கு கால் செய்து வங்கி அலுவலர் போல் பேசி அவருடைய வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று, மேலும் அவருக்கு வரும் OTP எண்ணை பகிர்ந்து கொள்ளும்படி கேட்பதன் மூலமும் இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இது குறித்த விழிப்புணர்வுகள் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தேவை.
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்திகளை தானாகவே படிப்பதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை உங்கள் எண்ணிற்கு கொள்ளையர்கள் முதலில் அனுப்பி வைப்பர். அதிலுள்ள லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் எண்ணிற்கு வரும் அனைத்து மெசேஜ்களையும் அவர்களால் கண்காணிக்க முடியும். எனவே இதுபோன்ற உங்களுக்கு சம்பந்தமே இல்லாத கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மற்றும் லிங்குகள் அனுப்பப்பட்டால் அதனை உடனே நீக்கிவிடுவது சிறந்தது.
அடுத்தது வங்கி அலுவலர் போல் பேசுபவர்களிடம் இருந்து எப்படி தப்புவது? உண்மையாகவே வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து உங்களுக்கு யாராவது கால் செய்தால் அவர்கள் நிச்சயம் உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் முழு விவரங்களை கேட்க மாட்டார்கள். குறிப்பாக CVV எண், கடவுச்சொல், உங்களுக்கு வரும் OTP எண் போன்றவைகளை கேட்க மாட்டார்கள். 
சில சமயங்களில் போன் கால்கள் மூலம் நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போதும், உணவு ஆர்டர் செய்யும் சமயங்களிலும் உங்களுக்கு எதிர்திசையில் உதவி புரியும் ஊழியர்கள் உங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு எண்கள், பின் நம்பர், OTP போன்றவற்றை வார்த்தையால் சொல்லும்படி கேட்க மாட்டார்கள். மாறாக உங்களது மொபைல் கீபேடில் நீங்களே டைப் செய்யும்படி கூறுவார்கள். அப்படியில்லாமல் உங்களிடம் வார்த்தையால் கூறும்படி கேட்பவர்களிடமிருந்து நீங்கள் நிச்சயம் விழிப்பாய் இருக்க வேண்டும். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் உடனடியாக அந்த காலினை துண்டிப்பது உங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிடம் மறைக்கும் அந்த’ 10 இரகசியங்கள் என்ன தெரியுமா..


நம்பிக்கை!
நாம் அதிக நம்பிக்கை வைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இதற்கு ஒத்து கொள்வோம். ஆனால், ஒரு சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் பல தோல்விகளை கண்டிருப்பார்கள். இதை மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சை மருத்துவர்களும் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
ஏமாற்றம்!
பல மருத்துவமனைகள் போலித்தனமாகவே இந்த அறுவை சிகிச்சையை மாற்றி விட்டனர். அதாவது, மிக எளிதில் தீர்க்க வேண்டிய நோய்களை கூட அறுவை சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என கூறி, பணத்தை நம்மிடம் இருந்து கறந்து விடுவார்கள். இதில் சில நேரங்களில் மரணம் கூட நேரலாம்.
போலி மருத்துவர்கள்!
சில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஆளில்லை என்பதற்காக ஆரம்ப கால மருத்துவர்களை வைத்து சிகிச்சை செய்கின்றனர்.
இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும். இது போன்ற நிலையை ஒரு போதும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள்.
உயிர்!
சில மருத்துவமனைகளில் புதுவித அறுவை சிகிச்சை எந்திரங்கள் வாங்கினால் அதை கூட உங்கள் மீது பரிசோதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இது போன்ற செயல்கள் பற்றி உங்களிடம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூற வாய்ப்பே இல்லை.
பணத்திற்காக!
சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால், எப்போதுமே அவர்கள் செய்யும் அறுவை சிகிச்சையை விட 10 மடங்கு பணத்தை கேட்பார்கள்.
இன்று இது போன்ற நிலை பலருக்கும் ஏற்படுகிறது. எதற்காக இவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதை அறிய வேண்டியது நம் கடமையாகும்.
பரிசோதனை!
எப்போதும் ஒரே மருத்துவமனையை நாடாதீர்கள். ஒரு மருத்துவர் உங்களுக்கு மிக பெரிய நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை நினைத்து வருந்தாமல் மேலும் சில மருத்துவர்களிடம் பரிந்துரை கேளுங்கள்.
இது தான் உங்கள் உயிரை காப்பாற்றும் ஒரே வழி. ஏனெனில், உங்களின் இது போன்ற நிலையை பற்றி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பலர் உண்மையை இப்போதெல்லாம் சொல்வதில்லை.
மது!
அர்ஜுன் ரெட்டி படத்தில் காட்டுவது போன்ற சில சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடக்க கூடும். அதாவது, சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் முன்னிரவிலோ அல்லது அறுவை சிகிச்சை செய்ய போகும் முன்னரோ இது போன்று குடித்து விட்டு அதனால் ஏற்படும் விபரீதத்தை எப்போதுமே உங்களிடம் இருந்து மறைத்து விடுவார்கள்.
இதய பாதிப்பு!
அறுவை சிகிச்சை செய்யும் போது இதயம் சரியான அளவில் செயல்படுகிறதா? என்பதை அறுவை சிகிச்சையின் அவசரத்தில் சில சமயங்களில் தவறு நடக்க கூடும்.
இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் மோசமானதுதான். இது போன்ற இதய பாதிப்பை உங்களிடம் பெரும்பாலும் மறைத்து விடுவார்கள்.
உங்கள் நிலை?
அறுவை சிகிச்சையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இதை வெளியில் கூறவே மாட்டார்கள். இந்த நிலை இன்று பல மருத்துவமனைகளில் நடந்து வருவதை நாம் கண் கூடாகவே பார்க்கலாம்.
என்ன நடக்கிறது?
அறுவை சிகிச்சை நடக்கும் இடத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, அவர்கள் கூறும் குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் அந்த கையேடு தான் எல்லாவற்றிற்கும் பதிலாக இருக்கும்.
ஏனெனில், அறுவை சிகிச்சை மருத்துவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் இதில் தான் செவிலியர் ஒருவர் குறிப்பெடுத்து கொண்டே வருவார்.

சிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகுதிகள் என்ன தெரியுமா?


மகாபாரதம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே பகையால் ஏற்பட்ட குருசேத்திர போர் பற்றியது மட்டுமல்ல. அது வாழ்க்கை நெறிகளையும், பல உறவுகளின் முக்கியத்துவத்தையும், அழகியலையும் உணர்த்துவது ஆகும். மகாபாரதத்தில் பல அழகான உறவுகள் இருந்தது, அதில் முக்கியமான உறவு என்றால் கிருஷ்ணருக்கும், திரௌபதிக்கும் இடையே இருந்த உறவாகும். திரௌபதிக்கும், கிருஷ்ணருக்கும் இடையே இருந்த உறவு விவரிக்க முடியாத ஒன்றாகும்.
திரௌபதிக்கு இன்னல்கள் நேரும் போதெல்லாம் அதனை தீர்க்க அங்கே கிருஷ்ணர் இருப்பார். கிருஷ்ணரின் அறிவுரைகளே திரௌபதிக்கு பெரிய பலமாக இருந்து வந்தது. கிருஷ்ணருக்கு மொத்தம் 8 மனைவிகள் இருந்தனர்.
ஒருமுறை கிருஷ்ணரின் மனைவி சத்தியபாமா திரௌபதியிடம் ஐந்து கணவர்கள் இருந்தும் திரௌபதி அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதன் இரகசியம் என்னவென்று வினவினார். அதற்கு திரௌபதி கூறிய பதில் எக்காலத்திற்கும் பயன்படக்கூடியதாகும். திரௌபதி கூறிய அந்த வாழ்க்கை ரகசியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர் அவராய் இருக்கட்டும்
திரௌபதி கூறுவது என்னவெனில் எந்த பெண்ணும் தன் கணவனை ஒருபோதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயலக்கூடாது. அவரை எப்பொழுதும் அவராக இருக்க விடவேண்டும். தன் கணவனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க சூனியம், தாந்திரீகம் போன்றவற்றை கையாளக்கூடாது. ஏனெனில் இது உங்கள் திருமண வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களின் அன்பு மட்டுமே கணவரை கட்டிப்போடும் ஆயுதமாக இருக்க வேண்டும்.
அவரின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு பபுத்திசாலி மனைவிக்கான அடிப்படை குணம் தங்கள் கணவனுடைய குடும்பத்தை பற்றியும், அதில் இருப்பவர்களின் குணநலன்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்வார்கள். இதனை நன்கு தெரிந்து வைத்துக்கொண்டாலே உங்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது.
தவறான நட்புகள்
திரௌபதியின் கூற்றுப்படி ஒரு பெண் வஞ்சம் மற்றும் பொய் பேசும் பெண்களுடன் எப்பொழுதும் நட்பாக இருக்கக்கூடாது. தவறான நட்புகள் கூட உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று திரௌபதி கூறுகிறார்.
மரியாதை
ஒரு பெண் எப்போதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது.தன் கணவரின் குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, வயதில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி அனைவரையும் மதித்து நடக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.
சோம்பறித்தனம் கூடாது
வேலைகளை செய்யும்போது சோம்பேறித்தனத்தை காட்டக்கூடாது. எந்தவொரு ஆணும் தன் மனைவி சுறுசுறுப்பாக இருப்பதையே விரும்புவார்கள் என்று திரௌபதி கூறுகிறார்.
அதிகமாக வெளியே இருக்கக்கூடாது
ஒரு பெண் எப்போதும் தன் அதிக நேரத்தை பால்கனி மற்றும் ஜன்னல் போன்ற இடங்களில் செலவிடக்கூடாது. ஏனெனில் இது அவர்களுக்கு சமூகத்தில் தவறான பிம்பத்தை உண்டாக்கும். குடும்ப உறவுகளுக்குள்ளும் விரிசலை ஏற்படுத்தும்.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்
ஒரு பெண் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் அது அவர்களுக்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். அதேசமயம் புதிய நபர்களுடன் அதிகமாக பழகுவதை தவிர்க்க வேண்டும் என்று திரௌபதி சத்யபாமாவிற்கு அறிவுரை கூறினார்.

அதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே!

டை ஆபரணங்கள் மட்டுமல்ல, தாங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கைக்கூடப் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள் பெண்கள். பேக்கின் உள்ளே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, எதையெல்லாம் எங்கெல்லாம் வைக்கலாம் என்று பார்ப்பார்கள். வாங்கிய சில நாள்களுக்குப் பிறகு கையில்வைத்திருக்கும் பொருள்களையெல்லாம் பையில் அடைத்துவிடுவார்கள். பொருள்கள் சேரச் சேர, பையின் எடையும் அதிகரிக்கத் தொடங்கும். `இப்படி அதிக எடையுள்ள பையைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதால், தோள்பட்டைவலி தொடங்கி, முதுகுத்தண்டுவட பாதிப்புவரை எக்கச்சக்க பிரச்னைகள் ஏற்படலாம்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.


“ஹேண்ட்பேக்கில் எதை வைக்க வேண்டும் என்றில்லாமல், அதிக எடையுள்ள பொருள்களை உள்ளே திணித்து, அவற்றை தினமும் சுமப்பது ஆரோக்கியமின்மைக்கான திறவுகோல். குறிப்பாக, ஒரு பக்கமாகப் பயன்படுத்தும் ஹேண்ட்பேக்கில் கனமான பொருள்களை வைத்து சுமப்பது ஆபத்தானது. இதுபோல தினமும் அதிக எடையைச் சுமக்கும் பெண்களுக்கு முதுமையைத் தொடும் முன்னரே எலும்புத் தேய்மானம் ஏற்படத் தொடங்கிவிடும்” என எச்சரிக்கிறார் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் அருண் கண்ணன்.
ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு அவர் தரும் ஆரோக்கிய அறிவுரைகள் இவை…
எதில் கவனம் தேவை?
ஹேண்ட்பேக் மற்றும் அதன் உள்ளேவைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் எடை மற்றும் அளவு, ஸ்ட்ராப்பின் நீளம் போன்றவைதான் சம்பந்தப்பட்டவருக்கு உடல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீளம் அதிகமுள்ள, தடிமனான ஸ்ட்ராப் வகைகளைப் பயன்படுத்துவதே சிறப்பு.
* பை தயாரிக்க எந்த வகைத் துணி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுகூட பிரச்னையைத் தீர்மானிக்கும். தடிமனான தோல் அல்லது ரெக்ஸினால் செய்யப்பட்டிருந்தால், தசைகளில் அழுத்தமாகப் பதிந்து அந்தப் பகுதியில் வலியை ஏற்படுத்தும். பிரச்னை அதிகரிக்கும்போது, நரம்புகள் பாதிப்படைந்து அவை சார்ந்த பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே, தரமான மற்றும் எடை அதிகமில்லாத துணிகளில் தயாரித்த பைகளை மட்டுமே வாங்கவும்.

* ஒருபக்கமாக ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு சென்றால், தோள்பட்டையில் வலி ஏற்படுவதுடன், உடலின் அமைப்பிலும் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, வலது பக்கம் ஹேண்ட்பேக் தொங்கவிடுபவர்களுக்கு, காலப்போக்கில் வலது தோள்பட்டை சற்று கீழ்நோக்கியும், இடது தோள்பட்டை சற்று மேல்நோக்கியும் மாறும். இதன் காரணமாக, பின்முதுகுவலி, கழுத்துவலி, மூட்டுவலி போன்றவை ஏற்படலாம்.

* அதிக எடையுள்ள ஹேண்ட்பேக்கைச் சுமப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்குமான அடிப்படை. எனவே, தினமும் ஹேண்ட்பேக்கைச் சுத்தப்படுத்தவும். முடிந்தவரை வாரம் ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும். தேவையில்லாத பொருள்களை அகற்றவும்.
* பேருந்து, ரயிலில் உட்கார இடமில்லாமல் தோள்களில் பையைத் தொங்கவிட்டபடி, நின்றுகொண்டே பயணிப்பவர்கள் தோளில் ஒருபக்கமாகச் சுமந்து செல்வது ஆபத்தானது. வருடக்கணக்கில் இப்படிச் சுமைகளுடன் பயணப்பட்டால், தசைகளில் பிரச்னை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வலி எடுக்கத் தொடங்கும். இதனால் காலப்போக்கில் தசைப்பிடிப்பு, பின்முதுகுவலி, இடுப்புவலி, மூட்டுத் தேய்மானம், குடலிறக்கம், டிஸ்க் தேய்மானம் போன்றவை ஏற்படக்கூடும். தீவிரமான தலைவலி ஏற்படுவது இவற்றின் முதல்நிலை. அதைத் தொடர்ந்து, தேவையில்லாத மனஉளைச்சல் ஏற்படக்கூடும்.
25, 30 வயதைத் தொடும் இளம்பெண்கள்கூட தாங்க முடியாத கழுத்துவலியால் அவதிப்பட இதுவும் ஒரு காரணம்.

* கழுத்துவலியோ, தோள்பட்டைவலியோ எதுவாக இருந்தாலும், அதை உதாசீனப்படுத்த வேண்டாம். இவற்றில் மூட்டு சார்ந்த பிரச்னைகளைக் குணப்படுத்த முடியாது; கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அந்த வகையில், முதல்நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்தும் வேலையைத் தொடங்குவதே நல்லது.
ஹேண்ட்பேக் நிர்வாகம் தெரியுமா?
முதலில் தேவையானவை, தேவையில்லாதவை என உங்களிடம் உள்ளவற்றைப் பிரித்துவைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

உங்கள் பையை, இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒருபுறம் அத்தியாவசியத் தேவைகளையும், மற்றொருபுறம் ஆடம்பரத் தேவைகளையும் வைப்பது நல்லது. இங்கு ஆடம்பரப் பொருள்கள் என்பவை, தற்காலிகமாகவோ குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமோ வைத்திருக்கும் பொருள்கள். இது ஒவ்வொருவரின் தேவையைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, சிலருக்கு சன்கிளாஸ் அத்தியாவசியம், அது சிலருக்கு ஆடம்பரம். எனவே, தனிநபர் விருப்பத்தைப் பொறுத்து, பொருள்களைப் பிரித்துக்கொள்ளுங்கள்.
அத்தியாவசியப் பொருள்களின் அளவைப் பொறுத்து, அதற்கேற்ற பை வாங்கிக்கொள்ளுங்கள். தற்காலிகமாக இருக்கும் பொருள்களை, அவ்வப்போது சுத்தப்படுத்துங்கள். வேண்டாமென்பதை, தாமதிக்காமல் நீக்கிவிடுங்கள். ஒவ்வொரு நாளும் இப்படிப் பிரித்துவைத்து, பையை அடுக்குவது நல்ல பழக்கம். தினமும் நேரம் கிடைக்காதவர்கள், வாரக் கடைசியில் பையைச் சுத்தப்படுத்தும் பணியை வைத்துக்கொள்ளுங்கள்.
ஹேண்ட்பேக் தேர்ந்தெடுக்கும்போது…
* முடிந்தவரை இரண்டு கைகளுக்கும் பொருந்தும் பைகளைப் பயன்படுத்தவும். ஒருபக்கப் பை என்றால், நீளமான பைகளாக வாங்கிக்கொள்ளவும். அதை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ மாட்டிக்கொள்ளவும்.
* ஒருபக்கப் பைகளை, இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி, சமமான நேரம் தொங்கவிட வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கைகளை மாற்றிக்கொள்வது சிறப்பு. பை இருக்கும் தோள்பட்டையில் வலி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், உடனடியாகக் கையை மாற்றிக்கொள்ளவும்.
* தடிமனான ஸ்ட்ராப்கொண்ட, நீளமான ஹேண்ட்பேக் வகைகளைப் பயன்படுத்தவும்.
* ஒருபக்க ஹேண்ட்பேக்கில், இடுப்புக்கு அருகே பையின் அடிப்பகுதி வருமாறு இருக்க வேண்டும். அந்தளவுக்கு நீளம் அவசியம்.
* எடை அதிகமுள்ள பொருள்களை, பையின் அடிப்பகுதியில் வைத்துக்கொள்ளவும். எடை குறைவான பொருள்கள், மேலே இருக்க வேண்டும்.

வலியைப் போக்கும் பயிற்சிகள்!
வலி ஏற்படாமலிருக்க, கழுத்துப் பகுதிக்கான கீழ்க்காணும் உடற்பயிற்சிகளைச் செய்துவரவும்.
* வலமிருந்து இடம், இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என 30 விநாடிகளுக்குக் கழுத்தை மெதுவாகச் சுழற்றி பயிற்சி செய்யவும். பயிற்சி செய்யும்போது நன்றாக மூச்சை உள்ளிழுத்து, வெளியேவிடவும்.
* முதுகுத்தண்டு நிமிர்ந்தபடி, கால்கள் தரையில் பதியுமாறு அமரவும். வலது கன்னத்தில் வலது கையை வைத்துக்கொண்டு, மெதுவாக இடது பக்கம் கழுத்தைத் திருப்பவும். ஐந்து நொடிகளில் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி வலது, இடது என இரண்டு பக்கமும் செய்யவும்.
* முதுகுத்தண்டு நிமிர்ந்து, கால்கள் பதியும்படி நாற்காலியில் அமர்ந்து,  இரு கைகளையும் கோத்துக்கொள்ளவும். கட்டை விரல்களைத் தாடையின் அடியில் வைக்க வேண்டும். தாடையில் கைவைத்தபடியே கழுத்தை மெதுவாக மேலே தூக்க வேண்டும். பிறகு, பழையநிலைக்கு வர வேண்டும். இதேபோல, தலையின் பின்புறம் கைகளைக் கோத்து, கழுத்தை மெல்லக் கீழே அழுத்த வேண்டும்; பழையநிலைக்கு வர வேண்டும்.


எலும்புகளை கவனியுங்கள்!
ம் எலும்புகளுக்குத் தேவையான அன்றாட கால்சியத்தைப் பெற ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு கப் தயிர் போதுமானது. 30 வயதுக்குப் பிறகு நம் எலும்புகளின் அடர்த்தி மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பிக்கும். எனவே, தினமும்  1,000 மி.கிராம் கால்சியம் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

சிறப்பான சிவப்பு முட்டைகோஸ்

சிவப்பு முட்டைகோஸில் (Red Cabbage) உள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.


Saturday, February 9, 2019

தினமும் உணவுக்கு முன் தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மகள் பற்றி தெரியுமா!



எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பதை விட எந்த அளவுக்கு ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்பதே முக்கியமானதாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் அது நமது அன்றாட வேலைகளை பாதிக்கும். அடிக்கடி மருத்துவமனையை தேடி செல்ல வேண்டியிருக்கும். அடிக்கடி மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதும் அந்த அளவிற்கு நல்லதல்ல…
நமது தினசரி வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வெளியில் சென்று தான் மருந்து தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சத்தான உணவுகளையும், நமது இயற்கை மூலிகைகளையும் உணவில் சேர்த்து வந்தாலே நோய்கள் நம்மை விட்டு எட்டி நிற்கும். இந்த பகுதியில் நாம் அடிக்கடி சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளும் அதனை எப்படி நாட்டுமருத்துவம் மூலமாக வெல்லலாம் என்பதை பற்றியும் காணலாம்.

தேங்காய்

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ரத்த உற்பத்திக்கு..

ரத்தம் குறைவாக உள்ளது என்பது அதிகப்படியானோருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாகும். இதற்கு, கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

மாதவிலக்கு சரியாக..

பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மாதவிலக்கு பிரச்சனையாகும். இதற்கு, கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

ரத்த சோகை குணமாக..

கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

சிறுநீர் எரிச்சல்

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

இரத்த குழாய் கொழுப்பு

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

சீதபேதி


ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

உடல் வலி

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

மூளை பலமாக

துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டை புண்

தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

அஜீரணம்

அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

கொத்தமல்லி


கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்,

கூந்தல் மென்மையாக்க உதவும் அரப்பு



கூந்தல் மென்மையாக்க உதவும் அரப்பு

 சீத்தாப் பழத்தின் விதைகளை உலர வைத்து, பின் அதை தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தூளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர வேண்டும். எண்ணெய்ச் சிக்கை போக்க அரப்புத் தூளைத் தேய்த்து வந்தால் தலை முடி சுத்தமாகும். பேனும் ஒழிந்து விடும்.

 ஒரு பங்கு அரப்புத்தூளுடன், 1 பங்கு சீகைக்காய் தூளை தண்ணீரில் கலந்து தலையில் எண்ணெய் வைத்தோ, வைக்காமலோ, தலைக்குத் தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகும்.

 சோப்புக்கு பதிலாக அரப்புத்தூள் தேய்த்து குளித்தால் உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் அரிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

 அரப்புத்தூளுடன், கஞ்சியைக் கலந்து தலைக்குத் தடவி, பத்து நிமிடம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கலாம். இது இயற்கை ஷாம்பு ஆகும்.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்,

முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்!



அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை. 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்.

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,
தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!


அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.

அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
மருத்துவம் தவிருங்கள்!
ஆரோக்கியத்தை அனுபவியுங்கள்
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்,

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!


நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!
1. நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. கண் எரிச்சல், உடல் சூடு
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. வயிற்றுக் கடுப்பு
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. பற் கூச்சம்
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. வாய்ப் புண்
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. தலைவலி
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. வயிற்றுப் பொருமல்
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. அஜீரணம்
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. வியர்வை நாற்றம்
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. உடம்புவலி
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. ஆறாத புண்
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. கண் நோய்கள்
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. மலச்சிக்கல்
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. நினைவாற்றல்
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. சீதபேதி
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. ஏப்பம்
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. பூச்சிக்கடிவலி
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. உடல் மெலிய
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. வயிற்றுப்புண்
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. வயிற்றுப் போக்கு
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. வேனல் கட்டி
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. வேர்க்குரு
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. உடல் தளர்ச்சி
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. தாய்ப்பால் சுரக்க
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. எரிச்சல் கொப்பளம்
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. பித்த நோய்கள்
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. கபக்கட்டு
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. நெற்றிப்புண்
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. மூக்கடைப்பு
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. ஞாபக சக்தி
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. மாரடைப்பு
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. கை சுளுக்கு
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. நீரிழிவு
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. உடல் வலுவலுப்பு
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.  (இயற்கை மருத்துவ குறிப்புகளிலிருந்து)

உடலுக்குக் தினமும் #இந்த_நான்கு_மூலிகை_நீர் போதும்



உடலுக்குக் தினமும் #இந்த_நான்கு_மூலிகை_நீர் போதும்
பல்வேறு நலன்களையும் தரும்...

கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை. ஷ...ரு

சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும்.கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்..
சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.
#இதில்_அப்படி_என்ன_இருக்கிறது ?
அ)பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்)
ஆ)சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம்.
இ)கங்களி இன்ன பிற மூலிகைகள். 
ஈ)வெட்டி வேர் உடலுக்குக் நன்மை தரக்கூடியது.

வெட்டி வேரினை விலாமிச்சை வேர் எனவும் கூறுவார்கள். கோடை காலத்தில் ஏற்படும் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால்  அவதிப்படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செய்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200  மி.கி. குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும்.
கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சுடும், தாகம் தணியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுபடுத்தும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு  ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும்.
பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) பன்னாட்டு கம்பெனியின் மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். மெச்ச வேண்டும்.
எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தார்களை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? 
அடிப்போம் ?

#பதினெண்_சித்தர்கள்_பிறந்த_பூமியல்லவா ? 
இந்த பொட்டலங்கள் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் விற்கிறது. 5 லிட்டர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் போட்டால் போதும்.

புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில்



புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகே,6 பழமையான ,அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இவை அனைத்தும் மைலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.

கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்

மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த வழிமுறைகள் இங்கே…

சப்த சிவஸ்தலங்கள்:

1.ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்
2.ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்,
3.ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்,
4.ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்,
5.ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்,
6.ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்,
7.ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்.

இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையிலேயே நாமும் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்போம்.

காரணீஸ்வரர்
1) ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்:

இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.

12 – ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தீர்த்தபாலீஸ்வரர்
2) ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்:

மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும்.

வெள்ளீஸ்வரர்
3) ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்:

மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வழிபடும் முறை

வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை ‘கண் டாக்டர்’ என்றே கொண்டாடுகிறார்கள்.

விருபாக்ஷீஸ்வரர்
4) ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்:

மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
வாலீஸ்வரர்

5) ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்:

‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்’ என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். 5-வதாக வழிபடவேண்டிய கோயில் இது.

மல்லீஸ்வரர்
6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்:

மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 6-வதாக வழிபடவேண்டிய ஆலயம் இது.
கபாலீஸ்வரர்

7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்:

மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.

புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் 7-வதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், ‘மயிலையே கயிலை; கயிலையே மயிலை’ என்ற சிறப்பைப் பெற்றது போலும்.
மயிலையே கயிலை,ஓம் நமச்சிவாய